பெரியபுராணம்

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும்.

மண்முதலாம் உலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப்

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப்புகன்று

நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி

அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅர சமர்ந்திருந்தார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்துவீழ்ந் தெழுந்துசே ணிடைவிட்ட

கன்று கோவினைக் கண்டணைந் ததுவெனக் காதலின் விரைந்தெய்தி

நின்று போற்றிய தனிப்பெருந் தொண்டரை நேரிழை வலப்பாகத்

தொன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய.

எல்லா உலகும் ஆர்ப்பெடுப்ப எங்கும் மலர்மா ரிகள்பொழியப்

பல்லா யிரவர் கணநாதர் பாடி ஆடிக் களிபயிலச்

சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ

நல்லா றோங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுதணைந்தார்.