திருவிசைப்பா

திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று.

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்

ஏழையேற் கென்னுடன் பிறந்த

ஐவரும் பகையே யார்துணை யென்றால்

அஞ்சலென் றருள் செய்வான் கோயில்

கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்

கடைசியர் களைதரு நீலம்

செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம் பலமே.