சேத்திரத் திருவெண்பா

சேத்திர வெண்பா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி

நொந்திருமி, ஏங்கி, நுரைத்தேறி - வந்துந்தி

ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை..

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது

பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி

எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே

நெடுங்களத்தான் பாதம் நினை.

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி

விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி

ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை

நீண்டானை நெஞ்சே நினை .