திருமந்திரம்

திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தனங் கொண்டார்

இடப்பக்க மேயிறை நேர்ந்ததே என்றார்

கிடக்கப் படுத்தார் நிடந்தொழிந்தாரே.

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற

ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன

துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்

அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்

ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்

வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி

நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

மதுவூர் குழலியும் மாடும் மனையும்

இதுவூர் ஒழிய இதணம் தேறிப்

பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி

மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.